சம்மாந்துறையின் கல்வியை மேலோங்கச் செய்யும் அதிபர்கள் மாநாடு சம்மாந்துறை தாறுஸ்ஸலாம் மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் யூ.எல்.எம்.ஹாஸீம் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் விமலவீர திசாநாயக்க, கிழக்கு சுகாதாரம்,மற்றும் தொழில் நுட்பக் கல்வி அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் ஆகியோர் அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.
இம்மாநாட்டில் மாகாண சபை உறுப்பினர் எம்.ஐ.அமீர், சம்மாந்துறை பிரதேச சபை தலைவர் ஏ.எம்.நௌஷாட், மாகாண கல்விச் செயலாளர் புஸ்பகுமார, மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிஸாம், வலயக் கல்விப் பணிப்பாளர்களான யூ10.எல்.எம்.ஹாஸீம், எம்.எஸ்.எம்.ஜலீல்,உமர் மௌலானா உள்ளிட்ட அதிகாரிகள் பலரும், பிரதேச அதிபர்களும் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment