(எம்.ரீ.எம்.பர்ஹான்)
சம்மாந்துறை பிரதேச சபையின் கீழ் இயங்கும் அமீர் அலி பொது நூலகம், வீ.சி பொது நூலகம், கல்லரச்சல் பொது நூலகம் மற்றும் மல்வத்தை பொது நூலகங்களுக்கு சுமார் நான்கு இலட்சம் ரூபய் பெறுமதியான நூல்கள் வழங்கும் நிகழ்வு இன்று (18.02.2014) சம்மாந்துறை அமிர் அலி நூலகத்தில் இடம் பெற்றது.
மேலும் சம்மாந்துறை அமிர் அலி பொது நூலகத்திற்கு போட்டோப் பிரதி இயந்திரம் ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டதுடன் மாணவர்களின் கல்வி செயற்பட்டை ஊக்குவிக்கும் முகமாக அமிர் அலி பொது நூலகத்தில் சில்ரன் தியேட்டர் பிரிவும் திறந்து வைக்கப்பட்டது.
இன் நிகழ்வில் சம்மாந்துறை பிரசே சபை தவிசாளர் அல் ஹாஜ் ஏ.எம்.எம்.நௌஷாட், பிரதி தவிசாளர், பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேச சபையின் செயலாளர், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment