(ஹனீபா)
இன்று (21) அதிகாலை 1.30 மணியளவில் அட்டாளைச்சேனையில் இடம் பெற்ற வாகன விபத்தில் ஒருவர் மரணமடைந்ததுடன் மற்றுமொருவர் கயமடைந்த நிலையில் மட்டக்களப்பு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற வருகின்றார்.
இன்று (21) அதிகாலை 1.30 மணியளவில் அட்டாளைச்சேனையில் இடம் பெற்ற வாகன விபத்தில் ஒருவர் மரணமடைந்ததுடன் மற்றுமொருவர் கயமடைந்த நிலையில் மட்டக்களப்பு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற வருகின்றார்.
வேளிநாட்டிலிருந்த வந்த பயணியை கொழும்பிலிருந்து அட்டாளைச் சேனைக்கு ஏற்றி வந்த வான் அட்டாளைச் சேனை தைக்கநகர் அரிசி ஆலைக்கு முன்பாக வேகக் கட்டுப்பாட்டை இழந்து அருகிலிருந்த மின் கம்பத்துடன் மோதிய பின்னர் மதில் சுவரை உடைத்துக்கொண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
வான் சாரதி மிஹார்தீன் வயது (54) என்பவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார் வானில் வந்த மற்ற நபர் காயமடைந்து மட்டக்களப்பு வைத்திய சாலைக்கு கொண்டு செவ்லப்பட்டுள்ளார்.
மரணமடைந்தவர் ஹம்பாந்தோட்டையை செர்ந்தவர் இவரது ஜனாசா தற்போது அக்கரைப்பற்று ஆதார வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான விசாரனைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மெற்கொண்டு வருகின்றனர்.
0 comments:
Post a Comment