இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

2/23/2014

திறன் மேம்பாட்டுக்கான ஒரு நாள் செயலமர்வு

(ஹனீபா)
இலங்கை தேசிய ஒப்பந்தகாரர் சங்கத்தின் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, கல்முனை, அம்பாறை கிளைகளின் ஏற்பாட்டில் ஒப்பந்தகாரர்கள் மற்றும் தொழில் நுட்ப உத்தியோகத்தர்களின் அறிவுத் திறன்களை மேம்படுத்துவது தொடர்பான ஒரு நாள் செயலமர்வு இன்று (22) சம்மாந்துறை ஜனாதிபதி விளையாட்டுப் பயிற்சி நிலையத்தில் என்.சீ.ஏ.எஸ்.எல் நிறுவனத்தின் கிழக்கு மாகாணத்துக்கான மட்டக்களப்பு, கல்முனை, அம்பாறை கிளைகளின் தவிசாளர் ஏ.எச்.எம்.ஜெமீல் தலைமையில் நடைபெற்றது.

எஸ்.ஆர். ஸ்ரீல் நிறுவனத்தின் முழு அனுசரனையுடன் நடைபெற்ற இச் செயலமர்வில் வளவாளர்களாக இலங்கை தேசிய ஒப்பந்தகாரர் சங்கத்தின் தெசிய பிரதி தவிசாளர் அதுல கலகொட, நிர்மானப் பொறியியலாளாரும் இக்டாட் நிறுவனத்தின் விரிவுரையாளருமான கே.நவரெட்னராஜா, இலங்கை தேசிய ஒப்பந்தகாரர் சங்கத்தின் எக்டா பணிப்பாளர் மெரீட் டி சில்வா, அந்நிருவனத்தின் மேல் மாகாணத்துக்கான நிர்மான பொறியியல் நிபுணர் நிஹால் டிமெல், திருமலை மாவட்டத்துக்கான நிர்மானப் பொறியியலாளர் எம்.ஏ.பிரான்சிஸ், எஸ்.ஆர். ஸ்ரீல் நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் நிறைவேற்று அதிகாரி பிரதீப் வெதஆராச்சி, சந்தைப்படுத்தல் முகாமையாளர் றோஹன விதானகமகே, நிறுவனத்தின் கிழக்கு மாகாணத்துக்கான மட்டக்களப்பு, கல்முனை, அம்பாறை கிளைகளின்  பிரதித் தவிசாளர் ஏ.முஹம்மட் உட்பட பொறியியலாளர்கள், தொழில் நுட்ப உத்தியோகத்தர்கள், ஒப்பந்தக்காரர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இச் செயலமர்வின்பொது ஒப்பந்தகாரர்கள் எதிர்நேக்குகின்ற நடைமுறைச் சிக்கல்கள். பிரச்சினைகள் அதற்கான தீர்வுகள் நிர்வாகச் சிக்கல்கள் அதற்கான தீர்வுகள் தொடர்பான பலதரப்பட்ட விரிவுரைகள் வளவாளர்களால் நிகழ்த்தப்பட்டன.



0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா