-ஹனீபா
மைஹோப் சர்வதேச குழுமத்தின் அனுசரளையுடன் சாளம்பைக்கேணி சமூக சேவைகள் விவசாய சுயதொழில் அபிவிருத்தி அமைப்பின் ஏற்பாட்டில் சாளம்பைக்கேணி பிரதேசத்திலுள்ள விதவைக் குடும்பங்கள் மற்றும் பாடசாலை செல்லும் வருமானம் குறைந்த மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் என்பன வழங்கும் நிகழ்வு நேற்று (14) மாலை சாளம்பைக்கேணி அஸ்ஸிறாஜ் மகா வத்தியாலயத்தில் அமைப்பின் தலைவர் யூ.எல.எம்.ஜாபீர் தலைமையில் நடைபெற்றது.
மைஹோப் சர்வதேச குழுமத்தின் அனுசரளையுடன் சாளம்பைக்கேணி சமூக சேவைகள் விவசாய சுயதொழில் அபிவிருத்தி அமைப்பின் ஏற்பாட்டில் சாளம்பைக்கேணி பிரதேசத்திலுள்ள விதவைக் குடும்பங்கள் மற்றும் பாடசாலை செல்லும் வருமானம் குறைந்த மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் என்பன வழங்கும் நிகழ்வு நேற்று (14) மாலை சாளம்பைக்கேணி அஸ்ஸிறாஜ் மகா வத்தியாலயத்தில் அமைப்பின் தலைவர் யூ.எல.எம்.ஜாபீர் தலைமையில் நடைபெற்றது.
இந்த வைபவத்தில் பிரதம அதிதியாக மைஹோப் சர்வதேச குழுமத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் லயன் சித்தீக் எம்.ஜே.எப் கலந்து கொண்டார் ஏனைய அதிதிகளாக அக்கரைப்பற்று வலயக்கல்வி அலுவலகத்தின் கணக்காளர் லயன் கே.றிஸ்வி யஹ்ஷர், நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர் ஏ.கே.சமட், சாளம்பைக்கேணி அஸ்ஸிறாஜ் மகா வத்தியாலயத்தின் அதிபர் எம்.யூசூப், நூரணிய பள்ளிவாசல் தலைவர் ஸெயின் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த வைபவத்தில் 100 விதவைக்குடும்பங்களுக்கு ஆயிரம் ரூபா பெறுமதி கொண்ட உலர் உணவுப் பொதிகளும், 50 வறிய மாணவர்களுக்கு பாடசாலைப் பை உட்பட கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
0 comments:
Post a Comment