இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

3/05/2014

கல்முனை மாநகர சபைக்கு 35 லட்சம் ரூபா பெறுமதியான கழிவகற்றி இயந்திரத் தொகுதி ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

-எம்.வை.அமீர்-
கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி எம்.நிசாம்காரியப்பரிர் எடுத்துக்கொண்ட முயற்சியின் பயனாக உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சினால கல்முனை மாநகர சபைக்கு 35 லட்சம் ரூபா பெறுமதியான கழிவகற்றி இயந்திரத் தொகுதி ஒன்றுவழங்கப்பட்டுள்ளது.

இதனைக் கையளிக்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை காலை உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சில் இடம்பெற்றது.

இதன்போது உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சர்ஏ.எல்.எம்.அதாஉல்லா, கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி எம்.நிசாம்காரியப்பரிடம் குறித்த இயந்திரத்திற்கான ஆவணங்களைக் கையளித்தார்.

இந்நிகழ்வில்உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சரின் பிரத்தியேக செயலாளர்- பொறியியலாளர்எம்.நஸீர், கல்முனை மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி ஆகியோரும்பங்கேற்றிருந்தனர்.


0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா