-எம்.வை.அமீர்-
கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி எம்.நிசாம்காரியப்பரிர்
எடுத்துக்கொண்ட முயற்சியின் பயனாக உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சினால கல்முனை மாநகர
சபைக்கு 35 லட்சம்
ரூபா பெறுமதியான கழிவகற்றி இயந்திரத் தொகுதி ஒன்றுவழங்கப்பட்டுள்ளது.
இதனைக் கையளிக்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை காலை உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சில் இடம்பெற்றது.
இதன்போது உள்ளூராட்சி,
மாகாண சபைகள் அமைச்சர்ஏ.எல்.எம்.அதாஉல்லா, கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி
எம்.நிசாம்காரியப்பரிடம் குறித்த இயந்திரத்திற்கான ஆவணங்களைக் கையளித்தார்.
இந்நிகழ்வில்உள்ளூராட்சி,
மாகாண சபைகள் அமைச்சரின் பிரத்தியேக செயலாளர்-
பொறியியலாளர்எம்.நஸீர், கல்முனை
மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி ஆகியோரும்பங்கேற்றிருந்தனர்.
0 comments:
Post a Comment