இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

3/02/2014

சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் பிரியாவிடை நிகழ்வு

(ஹனிபா)
அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பிரதேச செயலத்தில் நீண்ட காலமாக கடமையாற்றி பதவி உயர்வு பெற்றவர்கள், இடமாற்றம் பெற்றுச் சென்றவர்கள் மற்றும் ஓய்வு பெற்றுச் சென்ற உத்தியோகத்தர்களைப் பாராட்டிக் கௌரவிக்கும் மாபெரும் பிரியாவிடை நிகழ்வு இன்று (01) சனிக்கிழமை சம்மாந்துறைப் பிரதேச செயலக கேட்பேர் கூடத்தில் தலைமைப்பீட சமூர்த்தி முகாமையாளர் எம்.பி.எம்.ஹூசைன் தலைமையில் நடைபெற்றது.

சம்மாந்துறைப் பிரதேச செயலக உத்தியேகத்தர்கள் நலன்புரி ஒன்றியத்தினால்; ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக சம்மாந்துறைப் பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் கலந்து கொண்டதுடன் கௌரவ அதிதிகளாக உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஐ.அப்துல் லத்திப், கணக்காளர் ஏ.எல்.மஹ்றூப். உதவித் திட்டமிடல் பணிப்பாளர் கே.எல் ஹம்சார், மாவட்ட மேலதிக பதிவாளர் சீ.எம்;.எம்.சத்தார், சமூர்த்தி முகாமையாளர்கள் உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இந்த வைபவத்தில் கலந்த கொண்ட பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் உரையாற்றுகையில் இந்த வைபத்தில் கலந்து கொண்டு பிரியாவிடை பெறும் உத்தியோகத்தர்கள் அனைவரும் இந்தப் பிரதேச செயலகத்தில் மிகவும் அற்பணிப்புடனும் தியாகத்துடனும் பணியாற்றியவர்கள் அவர்கள் இப்பிரதேச மக்களுக்காக அளப்பரிய பணிகளை ஆற்றிவிட்டு அரசாங்கத்தின் அரச தொழில்சார் சட்ட வரையரையின் கீழ் பதவி உயர்வு பெற்றள்ளனர் அதுபோன்று இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளனர் அதற்கு மேலதிகமாக சிலர்;; ஓய்வு பெற்றுச் செல்கின்றனர் இவர்களின் பணிகள் மிகவும் பாராட்டத்தக்கதாகும் எனத் தெரிவித்தார்.

சம்மாந்துறைப் பிரதேச செயலகத்தபை; பொறுத்த வகையில் அம்பாறை மாவட்டத்தில் சனத்தொகையினாலும் நிலப்பரப்பினாலும் பாரிய பிரதேசமாகும் அந்த மக்களுக்கு பணியாற்றுவது ஒரு வரப்பிரசாதமாவதுடன் பாரிய சாவாலுமாகும்; அதற்கு முகங்கொடுத்து பணியாற்றிவிட்டு  இந்த மாவட்டத்தின் ஏனைய பிரதேசங்களுக்கு செல்பவர்கள் எதற்கும் பயப்படத் தேவையில்லை ஏனைய பிரதேசங்களில் அவர்களுக்க ஒரு நிம்மதி கிடைக்கும்  எனவும் தெரிவித்தார்.

இந்த வைபவத்தில் பலதரப்பட்ட 38 உத்தியோகத்தர்கள் பாராட்டப்பட்டு நினைவுச் சின்னங்கள் மற்றும் பெறுமதிமிக்க பரிசுப் பொதிகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர் அத்துடன் எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டும் என வாழ்த்துக்களும் தெரிவிக்கப்பட்டன.











1 comments:

  • mohamed says:
    March 11, 2014 at 2:30 PM

    sammanthurai peradasa sapael pani atte oivu pattuch salpavarhalukkum mattamahech chalpavarhalukkum anadu manamarntha nanrihal sammanthurayan anra vahael panivudan avarhalukku salamum vanakkamkalum.(ds manzoor nendahalam paniyatte urr kadamayai todara valthukkal)

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா