எம்.ஐ.சம்சுதீன் ,எம்.வை.அமீர்
கடந்த 2014-04-26ம் திகதி கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி A.W.அப்துல் கFப்பார் அவர்களின் ஏற்பாட்டில் கல்முனை ஸ்ரீ மாமாங்க வித்தியாலயத்தில் பொலிஸ் நடமாடும் சேவை இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் P.M.J. காமினி தென்னக்கோன் கலந்து கொண்டிருந்தார்.
குறித்த பிராந்தியத்தில் வசிக்கும் மக்களின் பொலிசாருடன் தொடர்புபட்ட பிரட்சினைகளுக்கு உடனடி தீர்வுகள் வழங்கப்பட்டதுடன் கடந்த காலங்களில் நடைபெற்ற பரிட்சைகளில் சிறப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment