-எம்.வை.அமீர், எம்.ஐ.சம்சுதீன்-
உழைப்பாளரை கௌரவிக்கும் மே தின நிகழ்வுகளை அநேக கட்சிகளும் தொழிற்ச்சங்கங்களும் தலைநகரை மையப்படுத்தி நடத்தி இருந்த போதிலும் ஐக்கிய தேசிய கட்சி தனது மே தின ஊர்வலத்தையும் பொதுக்கூட்டத்தையும் தலைநகருக்கு வெளியே அதாவது முதன்முறையாக அம்பாறை நகரில் ஏற்பாடு செய்திருந்தது.
ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளர் மாகாணசபை உறுப்பினர் தயா கமகே அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இன்றைய மே தின நிகழ்வுகளுக்கு பிரதம அதிதியாக அக்கட்சியின் தலைமைத்துவ சபையின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கரு ஜெயாசூரிய அவர்கள் கலந்து கொண்டிருந்தார்.
ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, தேசிய அமைப்பாளர் மாகாணசபை உறுப்பினர் தயா கமகே, உபதலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் மைக்கல்பெரேரா, தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசீம், இளைஞர் அமைப்பாளர் துவான் விஜேவர்தன, பாராளுமன்ற உறுப்பினர் அனோமா கமகே மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாணசபைகளின் உறுப்பினர்கள் மாநகர,நகர,மற்றும் பிரதேச சபைகளின் உறுப்பினர்கள் போன்றோருடன் அம்பாறை மாவட்டத்தின் கரையோரத்தை பிரதிநிதித்து வப்படுத்தும் மாநகர சபை உறுப்பினரும் அம்பாறை மாவட்ட இளைஞர் அமைப்பாளருமான ஏ.எச்.எச்.எம்.நபார் போன்றோரும் பெரும்திரளான மக்களும் கலந்து கொண்டிருந்தனர்.
இங்கு ஐக்கய தேசியக்கட்சியின் சார்பில் ஐந்து பிரகடனங்கள் முன்மொழியப்பட்டது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment