இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

7/27/2014

சான்றிதழ் வழங்கும் வைபவமும், இப்தார் நிகழ்வும்


எஸ்.ஆர்.டீ பவுன்டேசன் மற்றும் சமாதானத்திற்கான கற்கை நிலையம் இணைந்து வழங்கிய வலுவலகர் மற்றும் மாணவர்களுக்கான 'டிப்லோமா இன் மைக்ரோசொப்ட் ஒப்பீஸ்' கணனி கற்கைநெறி சான்றிதழ் வழங்கும் வைபவமும், இப்தார் நிகழ்வும் 23.07.2014 புதன் கிழமை, சமாதானத்திற்கான கற்கை நிலைய காரியாலயத்தில், இலங்கை இளைஞர் பாராளுமன்ற உறுப்பினறும் எஸ்.ஆர்.டீ பவுன்டேசனின் பணிப்பாளருமான பாறூக் பெரீஸ் முஹம்மட் தலைமையில் இடம் பெற்றது.

இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ உதவித் தவிசாளரும் எஸ.ஆர்.டீ பவுடேசனின் சிரேஷ்ட ஆலொசகருமாகிய ஏ. கலீலுர் ரஹ்மான் அவர்களும், விஷேட அதிதியாக சமாதானத்தின்கான கற்கை நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி எஸ்.எல் றியாஸ் அவர்களும், கௌரவ அதிதிகளாக எஸ.ஆர்.டீ பவுன்டேசனின் பொதுச் செயலாளரும் இக் கற்கை நெறியின் பயிற்றுவிப்பாளருமான பீ.எம் கியாஸ் அஹமட் அவர்களும் இளைளுர் சேவைகள் அதிகாரி எம்.எச்.எம் பைஸல் அமீன் அவர்களும் மற்றும் இன்னும் பல உயர் அதிகாரிகளும் கலந்து சிறிப்பித்தனர்.

இந் நிகழ்வில் இப்தார் நறிசிந்தனை அச்ஷேய்க் கே. அப்துல் கமால் (இஸ்லாஹி) அவர்களால் வழங்கப்பட்டது.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா