இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

1/04/2013

எலிக் காய்ச்சல் அபாய எச்சரிக்கை


நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 'லெப்டொஸ் பைரோஸிஸ்' எனும் எலிக்காய்ச்சல் அபாயம் தோன்றியுள்ளதாகவும் இதனால் பொதுமக்கள் மருத்துவ ஆலோசனைகளின்படி நடந்துகொள்ளுமாறும் தொற்றுநோய் வைத்திய பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. 


கம்பஹா, கொழும்பு, களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி, மாத்தறை, காலி போன்ற மாவட்டங்களில் இந்த காய்ச்சல் பரவி வருவதாக தெரிவித்துள்ள மேற்படி தொற்றுநோய் வைத்திய பிரிவு, ஆரம்பத்திலேயே உரிய மருத்துவ சிகிச்சைகளைப் பெறும் பட்சத்தில் இதனைக் கட்டுப்படுத்த முடியும் என்றும் கூறியுள்ளது. 



எலிகள் மற்றும் மாடுகள் உள்ளிட்ட சில விலங்குகளின் சிறுநீரிலிருந்து வெளியாகும் கிருமிகள் நீருடன் கலந்துவிடுவதால் பொதுமக்களுக்கு இந்த நோய் பரவுகின்றது எனவும் உடலில் ஏற்பட்டுள்ள காயங்களினூடாக மேற்படி கிருமிகள் மனித உடலுக்குள் இலகுவாக உட்புகுவதாகம் கண்டறியப்பட்டுள்ளதாக தொற்றுநோய் வைத்திய பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா